court

img

பள்ளி அருகே கூல்லிப் விற்க தடை விதிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை,செப்.25- பள்ளி அருகே கூல்லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் குட்கா, கூல்லிப் போன்ற பொருட்களைத் தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில் பள்ளி அருகே கூல்லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் ஆணை பிறப்பித்தும், புகையிலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு மேலும் பல கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.